புதன், 26 அக்டோபர், 2016

மழை = கவிதை

# 1
பெருங்கோடை நிலத்தில்
நாலே நாலு துளி தான்
பெய்திருக்க
அவசரமாய் வந்து
கவிதை கேட்கிறாய்
மழை வேண்டுமா
கவிதை வேண்டுமா

# 2

மென் தூறல் கிளர்த்தும்
மண் வாசனைக்கு
மயங்குபவன்
தவறவிடுகிறான்
நகரத்துக்குச் செல்லும் கடைசிப் பேருந்தை

# 3

முன்னேற்பாடுகள்
எதுவுமின்றி ஒரு
மழைநாளில்
நமக்குள் நிகழ்ந்துவிடுகின்ற
ஒரு முத்தத்தை

இன்னும் என்னால்
கவிதையாக்க முடியவில்லை.

# 4

முற்றத்தில்
மழை கவிதை எழுதிக்கொண்டிருக்க
மழைக் கவிதைதான் வேண்டுமா

# 5

முதன் முதலில் 
என்னைச் சபித்தபடிப் பெய்கிறது 
இந்த மழை. உன் கண்களில் பெய்யும் 
மழையைப் பொருட்படுத்தாது 
வழியனுப்பி வைக்கிறேன் நான்

4 கருத்துகள்: