புதன், 8 ஏப்ரல், 2015

ஜூஸ் குடிக்கறதுக்குக் கூட விஞ்ஞானி மாதிரி யோசிப்போம்


உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்றேன்.... நீங்களும் பின்பற்றலாம்

வாரா வாரம் சனி மற்றும் ஞாயிறுகளில் எங்க ஊர்ல இருக்கற ஜூஸ் கடைல நானும் பாரதியும் ஜூஸ் குடிப்போம். அதுல ஒரு ட்ரிக் இருக்கு, எப்பவும் ஜூஸ் வாங்கினா பார்சல் தான் வாங்குவோம். காரணம், பார்சல் ஒரு ஜூஸ் வாங்கினா ரெண்டரை டம்ளர் வரும். பார்சல் வாங்கிட்டு பாரதியின் நடன வகுப்புக்கு போற வழில குடிச்சுடுவோம். சாதாரணமா ஜூஸ் விலை 40 அல்லது 50 இருக்கும். கடைல குடிச்சா ரெண்டு பேருக்கு 100 ரூபாய் ஆயிடும். இதுவே பார்சல்னா 50 ரூபாய் தான். அதிகமா குடிச்ச மாதிரியும் ஆச்சு. 

நான் சாத்துக்குடி தான் அதிகமா குடிப்பேன் ( ஏன்னா அது தான் விலை கம்மி ) , பாரதிக்கு ஆரஞ்சு தான் பிடிக்கும். சில சமயங்களில் கூட யாராவது இருந்தா ரெண்டு பார்சல் வாங்குவோம். 4 டம்ளருக்கும் மேல வரும். 

# கஞ்சூஸ்னெல்லாம் திட்டாதீங்க. பிடிச்சா இத நீங்களும் பின்பற்றலாம்.

யாராவது கடைக்காரன் கிட்ட போட்டு குடுத்துடாதீங்க பா. ரகசியம் நமக்குள்ள இருக்கட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக