வெள்ளி, 18 ஜனவரி, 2013

நீ இல்லை ...

என்னிடமே கொட்டித்
தீர்க்கிறேன் என்
கோபங்களை.

எனக்குள்ளேயே அழுது
தீர்க்கிறேன் என்
கண்ணீரை.

என் தோளிலேயே
சாய்ந்து கொள்கிறேன்
நாதியற்று.

நீ எனக்கானவள் 
இல்லை என்று
முடிவான பின்பு

வேறு யாரிடம்
சொல்லி அழ என் சோகங்களை..?

இருப்பினும்
உனக்கே உனக்கான
என் காதலையும்
கருணையையும்
யாரிடத்தும் காட்டவியலவில்லை
என் உட்பட..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக