வெள்ளி, 9 நவம்பர், 2012

தீபாவளி

இந்த தீபாவளி
மிகுந்த சத்தங்களுடனும்
ஆரவாரங்களுடனும்
அதீத வலியுடனுமே
வந்திருக்கிறது ...

வழக்கமாக
வெளியில் ஒலிக்கும்
சத்தங்கள்
சந்தோஷம் தரும்.

இம்முறை
அணுகுண்டுகளும்
ஆயிரம் வாலாக்களும்
வெடித்துக் கொண்டிருப்பது
மனதுக்குள்.

சிவகாசியில் வெடி விபத்து
ஈழத்துக் கண்ணீர்
என எல்லாம் சேர்ந்து
நெஞ்சை அழுத்த
எதைக் கொண்டாடுவது..?