புதன், 29 பிப்ரவரி, 2012

கடவுளின் கதை

 
 
 
 
 
சிவப்பு விளக்கெரியும்
சாலை சந்திப்புகளில்
பிச்சை எடுக்கிறார்கள்
கடவுள்கள்.
 
பதினாறாம் வய்ப்பாட்டைத்
தலைகீழாய் ஒப்புவிக்கச் சொல்லி
பிரம்படி வாங்குகிறார்கள்.
 
பாதி கட்டி முடிக்கப்பட்ட
ஒரு கட்டிடத்தில்
வன் புணர்வு கொண்டு
சீரழிக்கப் படுகிறாள்
ஒரு கடவுள்.
 
பொம்மையை
வைத்திருந்த கடவுளின் கையில்
பிடிவாதமாகத் திணிக்கப் படுகிறது
தலையணையொத்த புத்தகங்கள்.
 
பாத்திரங்கள் கழுவவும்
சமையலைக் கற்றுக் கொள்ளவும்
கட்டாய வகுப்பெடுக்கிறார்கள்
பெண் கடவுள்களுக்கு மட்டும்.
 
இழி மனிதர்களின்
தேசத்தில்
வதைக்கப்பட்டு
சிறகுகளை முறித்துக்
கொண்டு
மனிதர்களாகவே
வளர்ந்து விடுகிறார்கள்
கடவுளாய்ப் பிறந்த
குழந்தைகள்.
 

புதன், 22 பிப்ரவரி, 2012

CCTV camera videos

Good Noon..
 

 
நட்புடன்,
இரா.பூபாலன்
 
செல்பேசி : 9842275662
 
 

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

மலரினும் ...

 

மலரினும் மெல்லிய

உன் இதயத்தில்

மலையினும் பெரிதாய்

இருக்கிறது

என் மீதான உன் காதல்.

          


இதய வடிவிலான

ரோஜாப் பூவொன்றைப்

பரிச்சளிக்கிறேன்.

ரோஜாவினும் மென்மையான

இதயம் கொண்ட உனக்கு.

           

புதன், 15 பிப்ரவரி, 2012

அம்மன் கோவில்
அர்ச்சனைப் பூவை
கூந்தல் கற்றையை
ஒதுக்கி நீ
சூடிக் கொள்ளும்
நேர்த்தியைப் பார்த்து
தன் கூந்தலை
ஒருமுறை சரி
செய்து கொள்கிறாள்
அம்மன்
யாரும் அறிந்திராவண்ணம்.

திங்கள், 13 பிப்ரவரி, 2012

காதல்

இரு மனதில்
ஒரு எண்ணம்
 
இரு விழிகளில்
ஒரு காட்சி
 
இரு உடலில்
ஒரு உயிர்
 
ஒரே சொல்லில்
ஒரு வாழ்க்கை
 
 
 
 

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சுவரெங்கும்
வண்ண வண்ண
சித்திரங்கள்
குழந்தை  கை வண்ணத்தில்.
விலை கொடுத்து
வாங்கி வந்து
சுவற்றில் மாட்டப்பட்ட
அழகிய ஓவியமொன்று
ஏங்கித் தவிக்கிறது
இப்படி இருந்திருக்கலாம் என்று.
கடவுள்களின்
நகரத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
நீ.
ஒரு வழிப் போக்கனாக
உன்னுள் நுழைந்த
நானும்
மாறியிருக்கிறேன்
கடவுளாக.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

அழுகை

 
ஓவெனக் கதறி
அழுவதைக் காட்டிலும்
அதிகம் வலிப்பது
சத்தமில்லாமல் அழுவது.
அதனினும் அதிகம்
வலிப்பது
கண்களில் நீர் வராமல்
அழுவது.