புதன், 23 ஜூன், 2010

என்ன சொல்லி அழ..?

செங்குருதி வழிந்தோடும்
வீதிகளில் பல்லக்கு
பவனி வருகிறார்
மாமன்னர்...
நாடெங்கும் மயானக்
காட்சிகளைக் கண்டு
கழிக்கிறார்...
சிதறிக்கிடக்கும்
மனிதத் தலைகளையும்,
பதறித்தவிக்கும்
எஞ்சிய தலைகளையும்
எண்ணிக் கணக்கு
சொல்கிறார் மந்திரி.
மன்னன் மகிழ..
புறமுதுகில் தோட்டாக்களைப்
பாய்ச்சுவதும்,
கன்னிப் பெண்களின்
கற்பறுப்பதுவும்,
புதிய யுத்த தர்மமென
அரசியல் சாசனம்
அவசர அவசரமாக
திருத்தி எழுதப்படுகிறது ...
மொத்தக் குடும்பமும்
செத்துப் போனபின்
இரங்கல் பாடல்களும்,
நிதி உதவிகளும்
யாரைப் பொய் சேர...?

1 கருத்து: